Search This Blog

Friday, February 26, 2010

தமிழா



உமக்கென தலையெழுத்தோ,
யாருக்கும் இலா உணர்ச்சி
உமக்கு ஏன்?
எங்கே உம் உடமைகள்?
எங்கே உம் இருப்பிடம்?
எங்கே உம் உறவுகள்?
எங்கே உம் செல்வங்கள்?
முற்றும் துறந்தவனே மேல்..
உண்ண, உறங்க மடமுண்டு...
உமக்கோ?
யாருக்காக? பலே....
அடுத்திங்கு மண்ணில் பிறக்கும்
ஒவ்வொரு சிசுவிலும் உமதுணர்ச்சி
குருதியோடு கலந்திட வேண்டும்..
வாழ்க தமிழ், வாழ்க தமிழினம்,
வாழ்க தமிழ்த் தலைவன் நீர்

போராட்டம்


ஓயா.... நமது போராட்டம்

பாரதி



சாதிகள் இல்லையடி பாப்பா, என
நீ கவிப் பாடியும், எவனும்
செவி சாய்க்கவே இல்லை,
ஆயிரம் புரட்சிக்கவி
தோன்றினும் இம் மதி கெட்ட
மனிதனின் புத்தி மாரா!!!!

Saturday, February 20, 2010

சதி

அடே தமிழா!!!!
காலி நிலம் கேட்டான்
அன்றோரு புரட்சித் தமிழன்
இன்றோ உன் கதி???
எல்லாம் ஓரினத்தின் சதி
உன்னினத்திலேயே மோதும் நீ!!!!
விலங்கினமா?? மனிதவினமா???
என்று தீருமோ இவ்விதி!!!

Friday, February 19, 2010

குப்பை

சாதி ஒரு வியாதி
அதனால் என்ன நீதி
சுடும் அனல் புழுதியில்
சுட்டேறிக்க வேண்டும்
அந்த மதி கெட்டவனை.