Search This Blog

Saturday, July 10, 2010

இந்திய மண்ணைக் கடந்தவன்

என் நாடு என்று இந்நாட்டில்
என்னால் மார் தட்டமுடியலயே....
ஏன்???
அடே!!! அந்நாளில்,
சதி செய்து,
விதி மாற்றினாய்,
எம்மை இந்நாட்டிற்கு
நீ கொண்டு வந்தாய்
வெள்ளையனே,
அகதியாய் வந்தோம்,
சகதியாய் வாழ்கிறோம்
இந்நாட்டில்,
தேட்டமென்று வேலிபோட்டு,
வெளியேராத சிறையில் தள்ளினாய்,
நான்கு தலைமுறை,
நன்கு கடந்தது,
தலையெடுக்க முடியாமல்
தலைவன் தடுக்கிறான்,
வேற்றினம் என,
வெறியோடு ஒதுக்குகிறான்,
கல்வி, அரசியல், பொதுநலம்,
அனைத்திலும் மூன்றாம்
நான்காம் நிலை,
அன்று முதல்
இன்று வரை
ஒதுக்கப் பட்ட இன்மென்று
விதிக்கப் பட்ட
தலை எழுத்தோ?
இன்றோ அரசியல்
நோக்கத்திற்காக ஒரு நாடாம்
ஒரு மக்களாம்,
சிரிப்பு வருகிறது...
நம்பி கெட்டது போதும்,
வெம்பி அழுதது போதும்,
என்று வரும் மார் தட்டிச் சொல்ல
இது எந்நாடு என்று?
உன் கையிலே உள்ளது,
உன் தலை எழுத்து...
மாற்றி அமை...
நாளை உன் தலைமுறை
வாழட்டும் நலனோடு...

No comments:

Post a Comment