Search This Blog

Saturday, July 17, 2010

பிச்சை

தமிழன் பிச்சை எடுக்க இங்கு வந்தான்
என்று சொன்னான் ஓர் அரசியல்வாதி,
அவன் சொல்வதற் கேற்பதான்
நம் தமிழனும் நடக்கிறான்....
அவன் வீசும் எழும்பு துண்டுகளுக்கு
உம் கொட்டும் மிருகமானோம்,
இன்றோ கையில் ரொக்கம் 25
இரண்டுவேளை உணவு,
இலவச பேருந்து பயணம்(கோலாலம்பூருக்கு)
புறப்பட்டுவிட்டான் தமிழன் வெட்கமில்லாமல்,
வேண்டாம் என்றுரைத்தேன்...
‘சும்மாதானே காசு கொடுத்து, சாபாடு கொடுத்து,
ப்ரியா KLக்கு வேற போறோம், என்னா
வந்திட போது, போவ வேண்டிதான்’
என்ற பதில்....
அவ்வாளவு அவல நிலைக்கா வந்துவிட்டோம்
நம் மலேசிய தமிழர்கள்...???
என்று மாறும்????

No comments:

Post a Comment